Wednesday, May 22, 2013

முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு...

மிகுந்த கஷ்டப்பட்டு மெகா முயற்சிகளால் +2&வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, தான் லட்சியமாகக் கொண்டிருந்த துறையைத் தேர்ந்தெடுத்த மாணவர்களானாலும் சரி, மிகுந்த பிரயத்தனப்பட்டும் ஓரளவு சுமாரான மதிப்பெண்களைப் பெற்று கல்லூரிகளில் சீட்டு வாங்கியிருந்தாலும்... வாங்கினாலும் சரி, யாராக இருந்தாலும் தயவுசெய்து இங்கு நான் சொல்வதை கவனமாக படித்து மனதில் நிறுத்துங்கள். நீங்கள் சேரும் கல்லூரியில் என்னென்ன கட்டுதிட்டங்கள் உள்ளன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். காரணம், சில கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளின் விதிமுறைகளை (தெரிந்தோ, தெரியாமலோ) மீறினால்கூட, தயவுதாட்சன்யமே இல்லாமல் சீட்டைக் கிழித்து அனுப்பவும் தயங்குவதில்லை. பெற்றோர்கள் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக படாத கஷ்டமெல்லாம் பட்டு, கடனை வாங்கி யார் யார் காலிலோ விழுந்து உங்களை கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். ஆனால், நீங்கள் கூட்டணி சேர்த்துக்கொண்டு இளமை வேகத்தில் எல்லாவற்றையும் மறந்து கட்டுக்கடங்காமல் நடந்து, சீட்டை கிழிக்கும்போது தலை கவிழ்ந்து நிற்பீர்கள். சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால், பல ஆண்டுகள்   வளமான வாழ்வு கிட்டும். எதற்கு இந்த அவமானம், ஏன் இந்தக் கொடுமையான சூழலில் நாம் சிக்க வேண்டும் என்று நினைத்து, நம் பெற்றோர்கள் பட்ட கஷ்டத்தை மனதில் வைத்து, கல்லூரி கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கரைசேரப் பாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்!