Friday, September 7, 2012

பார்த்தது பிடித்தது


பொதுவாக வாகனங்களின் பின்னால், சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பத்து அடி இடைவெளி விட்டு வரவும் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது சாதாரணம்.
சமீபத்தில் ஒரு வாகனத்தின் பின்னால் எழுதியிருந்த வாசகம் & 100&ல் பயணம் செய்தால்... 108 பின்னால் வரும்! என்பதுதான்.
உயிரோட்டம் கலந்த உண்மை.

உன்னால் முடியும்..!

விட்டத்தை முறைத்துப் பார்த்தால்
விட்டதை அடைய முடியாது
சோம்பலைப் பழித்துவிட்டு
சிற்றெரும்பாய் செயல்பட்டால்
சிகரத்தின் உச்சிகூட
சிறுமலையாய் தோன்றும்.