Friday, June 27, 2008

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நம் தேசத்துக்கு உலக நாடுகள் மத்தியில் ஒரு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு. அது எந்த விதத்தில் என்று பார்த்தால் பொருளாதாரம்,விஞ்ஞானம்,ஏற்றுமதி,தொழில் முன்னேற்றம் என்ற பல துறைகளை விடவும் முதன்மையாக நிற்பது கலாச்சாரம். மேலை நாடுகளில் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிமுறைகளுக்கு இடமே கிடையாது. யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற ரீதியில் அவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.சீர்கெட்ட வாழ்க்கை வாழும், குடும்ப அமைப்பு அற்ற மேலை நாட்டினரின் வாழ்க்கை கடிவாளம் இல்லாத குதிரைபோன்றது. ஆனால் நம் நாட்டில் தாய், தந்தை,அண்ணன்,தங்கை,அக்கா,தம்பி என்ற ஒரு பாசப்பிணைப்புடனான வாழ்க்கைமுறை உள்ளது.இதுதான் இன்றளவும் உலக நாடுகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தி, அவர்களின் பார்வைக்கு உயர்வாக நம்மை காட்டுகிறது. அதற்கு அடிப்படை நமது கலாச்சாரம்தான் என்பதில் ஐயமில்லை.ஆங்கிலேயர்களிடம் நாம் பல ஆண்டுகள் அடிமைபட்டுகிடந்தபோது கூட ஏற்படாத கலாச்சார சீரழிவு சமீபத்தில் தொழில் வர்த்தக முன்னேற்றம் என்ற பெயரில் இறக்குமதியான ஐ.டி. என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகளின் வருகையால் வேக வேகமாக விஷம்போல பரவி வருகிறது. ஆங்காங்கே நிகழும் அதிகப்படியான பாலியல் குற்றங்களும்,ஓரினச்சேர்க்கை பிரச்சனைகளும் அதற்கு சான்றுகளாக உள்ளன.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. சாஃட்வேர் இஞ்ஜினியர்களாகி லட்சம் லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஃபாரின் கம்பனிகளின் தாக்கம், கலாச்சாரத்துக்கு ஆணிவேராக இருக்கும் பெண்கள் மத்தியில்தான் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வேலையில் சேரும்போதே முதலில் உடையில் மாற்றங்கள் இருந்தால்தான் வேலையே கிடைக்கும்.நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுகிறார்கள். ஜீன்ஸ் பேண்டும்,டீசர்ட்டும்,ஸ்லீவ்லெஸ் பணியன்களும், அணிந்தால் மட்டுமே ஐ.டி. கம்பெனிகளில் அங்கிகாரம் என்ற நிலை உள்ளது. இதனால் இரண்டு பிள்ளை பெற்ற பெண்ணாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டுடன் ஒரு ஹேண்ட் பேகை மாட்டிக்கொண்டு அலைவது அதிகமாகிவிட்டது.கணவனை ஏமாற்றும் மனைவியும், மனைவியை ஏமாற்றும் கணவனும்,பெண்ணுக்கு பெண்ணே பேராசை பேராசைகொண்டு உறவுகொள்ளும் தகவல்கள் தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தபடி உள்ளன. அதற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும். சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இரண்டு தோழிகள்(கிறிஸ்டி,ருக்மணி&லெஸ்பியன்கள்) தவறான பாலியல் தொடர்பினால் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். இதை நியாயப்படுத்தி மள்ளுகட்டும் ஒரு சிலரின் வாதங்கள் பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தவறான பாலியல் தொடர்புகளால் முதலில் அழியப்போவது குடும்ப அமைப்பு. ஆண்,பெண்ணுக்கு இடையே உள்ள அன்னியோன்யம் அழியும். ஆணுக்கு பெண் அவசியமில்லை,பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை என்ற நிலை உருவாகிடும். கடைசியில் மேலை நாடுகளில் சொல்லப்படுவது போல் குற்றங்களின் எண்ணிக்கை பத்து நிமிடத்துக்கு பாலியல் குற்றங்கள் இத்தனை, கொலை இத்தனை,கொள்ளைகள் இத்தனை,கடத்தல்கள் இத்தனை என்ற நிலை உருவாகிவிடும். ஑இயற்கைக்கு முரணாக உடலுறவு கொள்வது தண்டனைக்குரியதுஒ என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 377&ல் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தையே திருத்தி ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் அளிக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதற்காக பரிந்துபேச,போராட பெங்களூருவில் உள்ளது போன்று சென்னையிலும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ள தகவல் சகித்துக்கொள்ள முடியாதது. இந்த கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்களும்,வழக்கறிஞர்களும்,பத்திரிகையாளர்களும் உள்ளது வேதனைக்குரியதாகும். ஆயிரம் உதாரணங்களை கூறினாலும் முரண் என்ற ஒரு விஷயம் முரண்தான் அதை முறைபடுத்த முணைவது முட்டாள்தனம். அது மீண்டும் நம்மை காட்டுவாசிகளாக்கி கற்காலத்துக்கு அழைத்து சென்றுவிடும்.

Wednesday, June 25, 2008

தினம் தினம் தாமதம்

தினம் தினம் தாமதம்
சிட்டுக் குருவியாய் விடியலில் எழுந்து...
புள்ளி மானாய் துள்ளி குதித்து...
மந்தியாய் தாவி ரயிலை பிடித்து...
அடிமாடாக பேருந்தில் பயணித்து...
வசவுகளை காதிலே வாங்கிக்கொண்டு...
வந்து சேர்ந்தேன் அலுவலகத்தில்.
சொகுசுக் காரில் வந்திறங்கி... கேட்டார் மேலாளர்!
ஏன் தாமதமாய் வருகின்றாய்...?
விக்கித்து நின்றேன் விடை சொல்ல முடியாமல்...
விதியை நொந்துகொண்டு.

Thursday, June 12, 2008

Bus rate

போக்குவரத்து அமைச்சரின் பேத்தல்
சென்னையில் கடந்த மே 28-ந் தேதி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய ஓட்டுநர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை செயலாளர் தலைமை தாங்கினார். விபத்தில்லாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநர்கள் 1100 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ‘‘அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தினமும் சராசரியாக ரூ.91 லட்சம் வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு கோடியே இருபது லட்சம் வசூலாகியிருக்கிறது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினமும் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வசூலாகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஒத்துழைப்பே இந்த வருவாய்க்கு காரணம்’’ என்று பேசியுள்ளார். இது எவ்வளவு பெரிய பேத்தல் என்பதை நிச்சயம் சென்னைவாசிகள் உணர்வார்கள். காலையில் அவசர அவசரமாக கிளம்பி நேரத்திற்கு அலுவலகம் சென்று சேரவேண்டும் என்ற வேகத்தில் ஓடும் நடுத்தர வர்கத்தின் தலையை தடவியதால் கிடைக்கும் வருவாய்தான் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் கிடைக்கும் அதிகப்படியான வருவாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பிழைப்பு தேடி சென்னையில் அடைக்கலம் புகும் நடுத்தர வர்கத்தினர் ஏராளம் ஏராளம். அவர்களின் மாதாந்திர வருமானமும்(4,000 முதல் 5,000 வரை) சொற்பமாகவே இருக்கும். அப்படி இருக்க அலுவலகத்திற்கு தாமதமானால் எங்கே அன்றைய தினம் வீணாகிவிடுமோ என்ற பதட்டத்துடன் ஓடும் மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை காசாக்கும் செயலில்தான் அரசு இறங்கி உள்ளது. ஒரு நாளைக்கு பேருந்து கட்டணத்துக்காக மட்டுமே இருபதில் இருந்து முப்பது ரூபாய் செலவு செய்தால் மாதத்தில் அந்த செலவு மட்டுமே சுமார் 900 ரூபாய் ஆகிவிடும். பஸ் பாஸ் வாங்கலாம் என்றால் அதுவும் மாதத்துக்கு 600 ரூபாய் ஆகின்றது. பத்து பந்தாவான ஏஸி, டீலக்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக சாதாரணமான இருபது பேருந்துகளை விடலாமே. அதனால் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் போகாமல், உயிருக்கும் ஆபத்தில்லாமல்,பாதுகாப்பாகவும்,வசதியாகவும்,நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதனால், மேலும் சில இளைஞர்களுக்கு நடத்துனர் ஓட்டுநர் வேலைகளும் கொடுக்க முடியும். இதைவிட்டு விட்டு டீலக்ஸ், ஏஸி, தாழ்தளபேருந்து என்ற பெயரில் பேருந்தில் ஏறினாலே டிக்கட் ஏழு ரூபாய், பத்து ரூபாய் என்று வசூலித்தால் ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்.தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் ஏஸி பஸ்ஸில் ஏறினாலே இருபத்தைந்து ரூபாய் டிக்கட். ஆனால் அதிகமாக ஓடுவது ஏஸி பஸ்ஸாக உள்ளபோது பிழைப்புக்கே கஷ்டப்படும் மக்கள் அதிகப்படியான கட்டணத்துக்கு என்ன செய்ய முடியும்.கிண்டியில் இருந்து டி.வி.எஸ்வரை டீலக்ஸ் பஸ்ஸில் செல்ல கட்டணம் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் சாதாரண பஸ்ஸில் நான்கு ரூபாய்தான் கட்டணம்.டீலக்ஸ் ஏஸி என்ற பெயரில் இரண்டு மடங்கு,மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை. போகிற போக்கை பார்த்தால் மாநகர பேருந்துகளில் மக்கள்(நடுத்தர, ஏழை எளிய) ஏறவே முடியாது போல் உள்ளதே..! போதாக்குறைக்கு பெட்ரோல் விலைவேறு விஷம்போல் ஏறுகிறது. தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே நிச்சயம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். தி&நகரில் இருந்து அண்ணா நகருக்கு சுமார் இருநூறுக்கும் மேல்பட்ட ஷேர் ஆட்டோ க்கள் ஓடுகின்றன. அனைத்து ஆட்டோ க்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கிறது. அப்படி என்றால் பேருந்துகளின் பற்றாக்குறை,நேரத்துக்கு பேருந்துகள் கிடைக்காதது போன்ற காரணங்களால்தான் மக்கள் ஷேர் ஆட்டோ க்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை சென்னை முழுதுமே பரவலாக உள்ளது. அரசு பரிசீலணை செய்து மக்களின் தேவைகளை உணர்ந்து உண்மையான அக்கரையோடு செயல்பட்டால் நடுத்தர வர்கத்தின் தலையை தடவி அந்த வருமானத்தை காட்டி பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

Book stall-T-NAGAR

கொட்டிக் கிடக்குது புத்தகப் பூக்கள்
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி எங்கோ ஒரு சில வீடுகளில் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தினாலும் விஞ்ஞான வளர்ச்சியினாலும் படிப்படியாக மாறி இன்று கலர் டி.வி. இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியும் அதேபோன்ற நிலையை ஒரளவு அடைந்துவிட்ட சூழ்நிலையில், கட்டுரைகள் எழுதவோ, கடிதம் எழுதவோகூட அதிகம்பேர் பேனாவை எடுப்பதில்லை.அதேபோல் உலக விஷயங்களை அறிந்துகொள்ளவும்கூட கணினி யுகத்தில் இணையதளங்கள் உதவுகின்றன. இணையதளங்களில் இல்லாத தகவல்களே இல்லை. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை விடுதிகளாகவும், டி.வி.டி.களாகவும்,கை அடக்க செல்போனின் ப்ளூடூத்களாகவும் உருவெடுத்துவிட்ட சூழ்நிலையில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை எப்படி உள்ளது, புத்தகப்பிரியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளோடு பிக் பஜார் என்று சொல்வார்களே அதுபோன்று சென்னைவாசிகளுக்கு விற்பனை மையங்கள் உள்ள இடங்களில் ஒன்றான தி.நகர் பாண்டிபஜார் நெடுகிலும் நடைபாதை கடைகளோடு உள்ள ஒரு சில புத்தகக் கடைகளை அனுகினோம். கடை இருப்பது நடைபாதை என்றாலும் அங்கே விற்கப்படுபவை பெரிய பெரிய படிப்பாளிகளையும், படைப்பாளர்களையும் ஈர்க்கும் புத்தகங்கள். இங்கே பழைய புத்தகங்கள் பாதி விலைக்கு கிடைக்கின்றன. ஒரு சில கடைகளில் புதிதாக வெளியிடப்படும் பதிப்பகங்களின் புதிய புத்தகங்களும் விற்கப்படுகின்றன. பாண்டிபஜார் பகுதியில் இப்படிப்பட்ட கடைகள் சுமார் ஏழெட்டு கடைகள்வரை உள்ளன. அவற்றுள் ஒரு புத்தகக் கடை உரிமையாளர் அருள்நாதன் என்பவரிடம் பேசும்போது ஑஑கடந்த பத்து வருடங்களாக இதே பகுதியில் ஒரு விற்பனை வளாகத்தில் புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறேன். பிளாட்பாரக் கடையை ஐந்து வருடமாக நடத்தி வருகிறேன். இங்கு அதிகமாக விற்பனை ஆவது ஆங்கில நாவல்கள், அடுத்ததாக தொழில் முதலீட்டு புத்தகங்களும், சமையல் குறிப்புகள், அழகு கலை குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனை ஆகின்றன. சுமார் இருபது பதிப்பகங்களின் வெளியீட்டில் வந்துள்ள புத்தகங்களை விற்பனை செய்கிறோம். அவற்றுள் விகடன் பதிப்பகத்தின் புத்தகங்களும் உள்ளன. விகடன் பிரசுரத்திற்காகவே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்களும் சில புத்தகங்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைபடு,மதனின் வந்தார்கள் வென்றார்கள் போன்ற புத்தகங்களும்.பெண்களுக்கான பழகிய பொருள் அழகிய முகம் போன்ற அழகு குறிப்பு புத்தகங்களும் வாசகர்கள் வாங்கிச்செல்கின்றனர்ஒஒ என்றார். அதே பகுதியில் உள்ள வேறொரு புத்தகக் கடை விற்பனையாளரான செல்வம் கூறும்போது ஑஑ஆங்கில நாவல்களில் சிட்னி ஷெல்டன் நாவல்களும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் நாவல்களும், தமிழில் கல்கி சாண்டில்யன் கதைகளும் அதிக விற்பனை ஆகும். ரமணிச்சந்திரனின் புத்தகங்களை பெண்கள் விரும்பி கேட்டு வாங்கிச்செல்வதுண்டு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை கேட்டு வரும் வாசகர்களும் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான புத்தகங்களில் தென்னாலி ராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனஒஒ என்றார். இந்தப் பகுதியில் புத்தகங்களை வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் அனைவருமே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை புத்தகக் கடைகளை நடத்தி வருகின்றனர். விற்பனையை பொருத்தமட்டில் அன்றும் இன்றும் ஒரே நிலை உள்ளது அதில் சரிவு ஏதும் இல்லை என்கிறார்கள். நாவல்களையும், கட்டுரை நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கிச் செல்லும் தொடர்ந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஒரு கடையில் இல்லாவிட்டாலும் வேறு கடை ஏதாவது ஒன்றில் வாசகர்கள் கேட்டு வரும் புத்தகங்கள் கிடைத்துவிடும். சில நேரங்களில் நாங்களேகூட நன்றாக பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, கிடைக்காத புத்தகங்களை வேறு எங்காவது கேட்டு வாங்கித் தருவதும் உண்டு என்கிறார்கள். ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்கள் தங்கள் புத்தகக் கடைக்கு வந்து செல்வதாக சொல்கிறார்கள். இதே பகுதியில் அப்துல்லா என்பவர் ஒரு புத்தகக் கடை நடத்தி வருகிறார். ஑஑எனது தந்தை சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு புத்தகக் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். அப்போதெல்லாம் மூன்று அல்லது நான்கு கடைகள்தான் இருந்தன ஐந்து வருடங்களுக்கு முன்புதான் மேலும் சில கடைகள் பெருகிவிட்டன. இருந்தாலும் பெரிய அளவில் எங்கள் விற்பனையில் பாதிப்புகள் இல்லை. பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் சேகுவேரா, ஸ்டாலின், ஹிட்லர் போன்ற தலைவர்கள் புத்தகங்களையும் ஸ்டெஃபன் ஆர் கோவே என்ற ஆங்கில எழுத்தாளரின் செவன்த் ஹாபிட்ஸ், எய்த் ஹாபிட்ஸ் போன்ற நாவல்களையும் அதிகமாக வாங்கிச் செல்வார்கள். மல்லிகா பத்ரிநாத், தாமோதரன் ஆகியோர் எழுதிய சமையல் குறிப்புகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா புக் ஹவுஸ் வெளியீடான டிங்கிள் என்ற சிறுவருக்கான ஆங்கில கதை புத்தகம் இல்லாத கடைகளே இருக்காதுஒஒ என்றார். வீட்டுக்குள்ளேயே உலகை அழைத்துவரும் கணினியும் இணையதளங்களும் எண்ணற்றவையாக இருந்தாலும், புத்தக பிரியர்களின் தேவையும் அறிவுப்பசிக்கான, பொழுதுபோக்குக்கான தேடல்களும் பூர்த்தியாகும் இடமாக, நல்ல நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும்,பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட புத்தகங்களை நமக்கு கிடைக்கச் செய்யும் இடமாகவும், சிலரின் வாழ்வாதாரமாகவும் பாண்டிபஜாரின் நடைபாதை கடைகள் விளங்குகின்றன.