Friday, June 27, 2008

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நம் தேசத்துக்கு உலக நாடுகள் மத்தியில் ஒரு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு. அது எந்த விதத்தில் என்று பார்த்தால் பொருளாதாரம்,விஞ்ஞானம்,ஏற்றுமதி,தொழில் முன்னேற்றம் என்ற பல துறைகளை விடவும் முதன்மையாக நிற்பது கலாச்சாரம். மேலை நாடுகளில் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிமுறைகளுக்கு இடமே கிடையாது. யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற ரீதியில் அவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.சீர்கெட்ட வாழ்க்கை வாழும், குடும்ப அமைப்பு அற்ற மேலை நாட்டினரின் வாழ்க்கை கடிவாளம் இல்லாத குதிரைபோன்றது. ஆனால் நம் நாட்டில் தாய், தந்தை,அண்ணன்,தங்கை,அக்கா,தம்பி என்ற ஒரு பாசப்பிணைப்புடனான வாழ்க்கைமுறை உள்ளது.இதுதான் இன்றளவும் உலக நாடுகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தி, அவர்களின் பார்வைக்கு உயர்வாக நம்மை காட்டுகிறது. அதற்கு அடிப்படை நமது கலாச்சாரம்தான் என்பதில் ஐயமில்லை.ஆங்கிலேயர்களிடம் நாம் பல ஆண்டுகள் அடிமைபட்டுகிடந்தபோது கூட ஏற்படாத கலாச்சார சீரழிவு சமீபத்தில் தொழில் வர்த்தக முன்னேற்றம் என்ற பெயரில் இறக்குமதியான ஐ.டி. என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகளின் வருகையால் வேக வேகமாக விஷம்போல பரவி வருகிறது. ஆங்காங்கே நிகழும் அதிகப்படியான பாலியல் குற்றங்களும்,ஓரினச்சேர்க்கை பிரச்சனைகளும் அதற்கு சான்றுகளாக உள்ளன.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. சாஃட்வேர் இஞ்ஜினியர்களாகி லட்சம் லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஃபாரின் கம்பனிகளின் தாக்கம், கலாச்சாரத்துக்கு ஆணிவேராக இருக்கும் பெண்கள் மத்தியில்தான் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வேலையில் சேரும்போதே முதலில் உடையில் மாற்றங்கள் இருந்தால்தான் வேலையே கிடைக்கும்.நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுகிறார்கள். ஜீன்ஸ் பேண்டும்,டீசர்ட்டும்,ஸ்லீவ்லெஸ் பணியன்களும், அணிந்தால் மட்டுமே ஐ.டி. கம்பெனிகளில் அங்கிகாரம் என்ற நிலை உள்ளது. இதனால் இரண்டு பிள்ளை பெற்ற பெண்ணாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டுடன் ஒரு ஹேண்ட் பேகை மாட்டிக்கொண்டு அலைவது அதிகமாகிவிட்டது.கணவனை ஏமாற்றும் மனைவியும், மனைவியை ஏமாற்றும் கணவனும்,பெண்ணுக்கு பெண்ணே பேராசை பேராசைகொண்டு உறவுகொள்ளும் தகவல்கள் தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தபடி உள்ளன. அதற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும். சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இரண்டு தோழிகள்(கிறிஸ்டி,ருக்மணி&லெஸ்பியன்கள்) தவறான பாலியல் தொடர்பினால் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். இதை நியாயப்படுத்தி மள்ளுகட்டும் ஒரு சிலரின் வாதங்கள் பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தவறான பாலியல் தொடர்புகளால் முதலில் அழியப்போவது குடும்ப அமைப்பு. ஆண்,பெண்ணுக்கு இடையே உள்ள அன்னியோன்யம் அழியும். ஆணுக்கு பெண் அவசியமில்லை,பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை என்ற நிலை உருவாகிடும். கடைசியில் மேலை நாடுகளில் சொல்லப்படுவது போல் குற்றங்களின் எண்ணிக்கை பத்து நிமிடத்துக்கு பாலியல் குற்றங்கள் இத்தனை, கொலை இத்தனை,கொள்ளைகள் இத்தனை,கடத்தல்கள் இத்தனை என்ற நிலை உருவாகிவிடும். ஑இயற்கைக்கு முரணாக உடலுறவு கொள்வது தண்டனைக்குரியதுஒ என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 377&ல் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தையே திருத்தி ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் அளிக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதற்காக பரிந்துபேச,போராட பெங்களூருவில் உள்ளது போன்று சென்னையிலும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ள தகவல் சகித்துக்கொள்ள முடியாதது. இந்த கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்களும்,வழக்கறிஞர்களும்,பத்திரிகையாளர்களும் உள்ளது வேதனைக்குரியதாகும். ஆயிரம் உதாரணங்களை கூறினாலும் முரண் என்ற ஒரு விஷயம் முரண்தான் அதை முறைபடுத்த முணைவது முட்டாள்தனம். அது மீண்டும் நம்மை காட்டுவாசிகளாக்கி கற்காலத்துக்கு அழைத்து சென்றுவிடும்.

No comments:

Post a Comment