Wednesday, June 25, 2008

தினம் தினம் தாமதம்

தினம் தினம் தாமதம்
சிட்டுக் குருவியாய் விடியலில் எழுந்து...
புள்ளி மானாய் துள்ளி குதித்து...
மந்தியாய் தாவி ரயிலை பிடித்து...
அடிமாடாக பேருந்தில் பயணித்து...
வசவுகளை காதிலே வாங்கிக்கொண்டு...
வந்து சேர்ந்தேன் அலுவலகத்தில்.
சொகுசுக் காரில் வந்திறங்கி... கேட்டார் மேலாளர்!
ஏன் தாமதமாய் வருகின்றாய்...?
விக்கித்து நின்றேன் விடை சொல்ல முடியாமல்...
விதியை நொந்துகொண்டு.

No comments:

Post a Comment