இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பக்கத்து மாநில தமிழர்களுக்கு காவிரி நதி நீர் கிடைப்பதே பிடிக்காத இவரா இலங்கையில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார். தமிழகத்தில் இனம் அழிய காரணமானவர்களின் கூடாரத்தில்தானே அவரும் இருக்கிறார். ஓட்டைப் படகில் சவாரி செய்வதும் எஸ்.எம். கிருஷ்ணாவை நம்புவதும் ஒன்றுதான். தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் இலங்கை கப்பற்படையை தட்டிக் கேட்கவே மத்திய அரசு இம்மியளவும் முயற்சிக்கவில்லை. ஒரு கண்டனக் குரல் கொடுக்கவே திராணியற்று இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்காரனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?
Thursday, October 11, 2012
Wednesday, October 10, 2012
தமாசு கண்ணா... தமாசு..!
ஆட்சியில் நேர்மையான, நிர்வாகம் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத நிர்வாகத்தை மேற்கொள்ள, ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலுவானதாக்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்படும். அப்படி இல்லையெனில் ஊழல் பெருகி, எதிர்மறையான ஒரு சூழல் ஏற்பட்டு நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பேசியது யார் தெரியுமா? நம்ம பிரதமர்தான். சி.பி.ஐ.யின் 19வது மாநாட்டில் நாட்டின் புகழுக்காக ரொம்பவே கவலைப்பட்டுள்ளார். படிக்கும்போதே தமாசா இருக்குமே..! என்ன பண்றது எல்லாமே நம்ம தலையெழுத்து. சாத்தான் வேதம் ஓதுவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன் அது நினைவுக்கு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)