Wednesday, October 10, 2012

தமாசு கண்ணா... தமாசு..!


ஆட்சியில் நேர்மையான, நிர்வாகம் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத நிர்வாகத்தை மேற்கொள்ள, ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலுவானதாக்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்படும். அப்படி இல்லையெனில் ஊழல் பெருகி, எதிர்மறையான ஒரு சூழல் ஏற்பட்டு நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பேசியது யார் தெரியுமா? நம்ம பிரதமர்தான். சி.பி.ஐ.யின் 19வது மாநாட்டில் நாட்டின் புகழுக்காக ரொம்பவே கவலைப்பட்டுள்ளார். படிக்கும்போதே தமாசா இருக்குமே..! என்ன பண்றது எல்லாமே நம்ம தலையெழுத்து. சாத்தான் வேதம் ஓதுவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன் அது நினைவுக்கு வருகிறது.

1 comment:

  1. உங்கள் போஸ்டிங்குகளின் தலைப்புகள் அருமையாக உள்ளன...

    ReplyDelete