Wednesday, August 13, 2008

சுதந்திரமில்லா சுதந்திர தினம்


வீணர்கள் கூட்டம் ஒன்று...

வெடிகுண்டு காட்டி மிரட்டும் செயல் கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

அற்பப் பணத்துக்காக....

சோடைபோன சோம்பேறிகள் நிலை கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பில்...

தமிழகத்தில் சுதந்திர கொண்டாட்டமாம்!

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

மதத்தின் பெயராலே மனித உயிர் பலி கேக்கும்

உன்மத்தர் வெறிச்செயலால்...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

சுதந்திர தினத்துக்கே சுதந்திரமில்லாததை

எண்ணிப் பார்க்கையில்...

வெட்கித் தலை குணிகின்றேன்....

வேதனைப் படுகின்றேன்.

No comments:

Post a Comment