Monday, February 25, 2013

உள்ளதை சொல்வதில் என்ன தவறு?


விஸ்வரூபம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டபோது இயக்குநர் பாரதிராஜா பேசியது.
‘கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனைப்பட வைத்துவிட்டார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். நாட்டின் கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள் மூவரும்தான்.
கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனமே அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது. கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது, தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
கமல் என்ன தவறு செய்து விட்டான்? நடப்பு நிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா? பின்லேடனையும், முல்லா ஓமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா? கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா? அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள்.’

No comments:

Post a Comment