Wednesday, September 17, 2008

பாமரனின் பஞ்சப்பாட்டு



பாமரனின் பஞ்சப்பாட்டு


வெலவாசி எகிறிப்போச்சு வெஷம்போல ஏறிப்போச்சு பெட்ரோலும் டீசலும் கெடைக்கறதில்ல பவர்கட்டும் ஓயவில்ல நெலமெல்லாம் காஞ்சிப்போச்சு வெவசாயிங்க வாழ்க்கையும் மாஞ்ஜிப்போச்சு வண்டி ஓட்டவும் முடியல வாழ்க்கை நடத்தவும் வழியில்ல பரம்பற சொத்து எதுவுமில்ல பேங்குல பேலன்ஸ்கூட இல்ல பதுக்கல்காரன் பதுக்கியத... வீணாப்போன பின்னால பாதி வெலக்கி வித்ததாட்டும்... ஏழபாழ எங்களுக்கு... புழுத்துப்போன அரிசியெல்லாம்... தலைவா! நீ ஒரு ரூபாவுக்குப் போட்டுபுட்டா போதுமா? நாய்கூட சீண்டாத கூப்பன் அரிசி அது எங்க வாழ்கைக்கான அரிசியா? வாய்க்கரிசியா? அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடலாம் அத்தியாவசிய பொருளுக்காக மக்கள் திண்டாடலாமா? கவர்ச்சித் திட்டங்கள நிறுத்துங்கய்யா கவனத்த மக்கள் நலனுல திருப்புங்கய்யா.


No comments:

Post a Comment