இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பக்கத்து மாநில தமிழர்களுக்கு காவிரி நதி நீர் கிடைப்பதே பிடிக்காத இவரா இலங்கையில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார். தமிழகத்தில் இனம் அழிய காரணமானவர்களின் கூடாரத்தில்தானே அவரும் இருக்கிறார். ஓட்டைப் படகில் சவாரி செய்வதும் எஸ்.எம். கிருஷ்ணாவை நம்புவதும் ஒன்றுதான். தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் இலங்கை கப்பற்படையை தட்டிக் கேட்கவே மத்திய அரசு இம்மியளவும் முயற்சிக்கவில்லை. ஒரு கண்டனக் குரல் கொடுக்கவே திராணியற்று இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்காரனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?
நீங்கள் கொடுக்கின்ற தலைப்புகள் பிரமாதம்...
ReplyDelete