Friday, January 4, 2013

பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்!


டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையிலும் அந்தக் குற்றத்துக்கான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்கவே மக்கள் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இது வெக்கக் கேடான விஷயம். போஃபஸ் ஊழல், மாட்டுத் தீவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலை வழக்குகள் ஆகியவற்றில் சர்வசாதாரணமாக தப்பித்துக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு போனஸ் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது வரம்பு எது என்று சொல்லியிருப்பதுதான் அது.டெல்லி மாணவி பலாத்காரத்தைத் தொடர்ந்து பல வித விவாதங்களும் வழக்குகளும் மக்களால், பொதுநலச் சிந்தனையாளர்களால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கும் கருத்து சில அரசியல்வாதிகளுக்கு உச்சி குளிரச் செய்திருக்கும். பலாத்கார குற்றங்களில் தொடர்புள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். பிட்பாக்கெட் அடிப்பவனையும், பசிக் கொடுமையால் திருடுபவனையும் தண்டிக்கும் சட்டம் பதவியில் இருக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி தண்டித்தால்தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை சாகாமல் இருக்கும். கழுவுகிற மீனில் நழுவிடாமல் சட்டம் தன் கடமையை செய்திட வேண்டும். சட்டம் உண்மையிலேயே இருட்டறை ஆகிவிடக் கூடாது.

No comments:

Post a Comment