Tuesday, January 8, 2013

நிதர்சனமான உண்மை!

அன்று இந்தியாவில் இருந்து சென்று சகோதர சகோதரிகளே என்று சிகாகோவில் சொற்பழிவாற்றி, உலகையே தன்பக்கம் ஈர்த்தார் விவேகானந்தர். இன்று அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து இந்து சமயத்தின் பெருமையை பகவத் கீதையை பதவியேற்க சாட்சியமாக்கி உலகையே தன்வசம் திரும்பச் செய்திருக்கிறார் ஒருவர். ஆம், அமெரிக்காவின், ஹவாய் பகுதியைச் சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, எம்.பி&யாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த 2012&ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு (31), பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், எம்.பி&க்களாக பதவி ஏற்றனர்.
துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, உறுதி மொழி ஏற்றுள்ளார்.
இதுகுறித்து துளசி கூறியதாவது: “பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால்தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.” நிதர்சனமான உண்மையை, நித்தியமான பெருமையை உணர்வுபூர்வமாக உலக அரங்கில் உறுதிமொழியாக உணர்த்தியிருக்கின்றார் துளசி கபார்டு.

No comments:

Post a Comment